என்னிடம் மருத்துவம் ஆலோசனை பெற்று வரும் சரோஜா என்பவரின் 35 வயது நிரம்பிய மகள் ரேணுகா விற்கு அதிகாலையிலிருந்து வயிறு வலியால் மிகுந்த அவதி படுவதாகவும் ஹோமியோபதி மருந்து அவரது கனவரிடம் கொடுத்து உதவுங்கள் என்று செல் பேசி முலம் கேட்டுக்கொண்டார். வயிறு வலி தொடர்பான சில விபரங்களை கேட்டு விட்டு அவரது கனவரிடம் வயிறு வலிக்கான மருந்துகளை கொடுத்து அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழித்து வயிறு வலி குறையவே இல்லை. நேரில் வந்து மகளை பார்த்து சிகிட்சையளிக்குமாறு ம் அக்குப்பங்சர் சிகிட்சை வழங்க முடியுமா? என கேட்டார். செல் பேசியில் ரேணுகாவிடம் சில விபரம் கேட்டபோது சிறுநீரககல்லினால் ஏற்பட்ட வயிறு வலி என்பதை யூகிக்க முடிந்தது. உடனே வருகிறேன்.என்று அக்கு ஊசிகளூம் சிறுநீரகல் கோளாறுகளுக்கான ஹோமியோபதி மருந்துகளும் எடுத்து சென்றேன்.அக்குபங்சர் போட்டதும் சில விநாடிகளில் வயிறு வலி குறைந்தது.கொண்டுபோன மருந்துகளையும் பயண் படுத்தினேன். சிறிது நேரம் மட்டும் குறைந்த வயிறு வலி மீண்டும் தலை தூக்கியது.நான் எதிர் பார்த்த பலன் கிடைக்க வில்லை. ரேணுகாவின் நடவடிக்கைகளை உண்ணிப்பாக கவணித்தேன்.வலிதாங்கமுடியாமல் கட்டிலில் படுக்கிறார், சில விநாடிகளில் எழுந்து தனது அம்மாவின் தோளில் சாய்கிறார்.பின் அக்காவின் தோளில் சாய்கிறார்.அமைதியற்ற தன்மையை காண முடிந்தது. வயிறு வலியுடன் எரிச்சல் உள்ளதா? என கேட்டேன் இல்லை என்றார். இவருடைய நடவடிக்கைகள்: ஆர்சனிக்கம் ஆல்பம்” என்ற ஹோமியோபதி மருந்தை சுட்டி காட்டுகிறதே. ஆனால் ஆர்சனிக்கத்தின் மற்றொரு முக்கிய குறியான எரிச்சல் இல்லையே என யோசித்தேன்.ஒரு மருந்தின் மிக முக்கியமான குறிகளில் ஒன்று அதுவும் பல மான குறியாக அமைந்துவிட்டால் வேறு அறிகுறிகளை ஆராயவேண்டாம் ..அம் மருந்தே அந் நபரை முழுமையாக குணப்படுத்தும்.என்ற ஹோமியோபதியின் தந்தை ஹானிமனின் பொன்மொழி நினைவுக்கு வந்தது. சற்றும் தாமதியாமல் மருத்துவமனை வந்து :ஆர்சனிக்கம் ஆல்பம்: 200 வது வீரியத்தில் 10 மாத்திரையை 50 மில்லி தண்ணீரில் கலக்கி ஒருஸ்டீஸ் பூன் அளவு குடிக்க செய்தேன். இரண்டு நிமிடத்தில் தூங்கி விட்டார். நாணும் பத்து நிமிடம் ரேணுகாவை பார்த்து கொண்டே கனவர்,அக்கா,அம்மா, அப்பா ஆகியோருடன் பேசிக்கொண்டேயிருதேன். ரேணுகா ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிட்டார் மறு வேளை மருந்து தேவைப்படவேஇல்லை. இது என்ன தூக்க மருந்தா எனக் கேட்டார்கள் வீட்டில் இருந்தவர்கள். இவ்வளவுநேரம் வலி தாங்கமுடியாமல் போரடிக்கொண்டிருந்தார்.இப்போது வலி குறைந்து விட்டது. போரட்டக் களைப்பினால் தற்போது உடல் அமைதி பெறுகிறது. அதனால் ஆழ்ந்து தூங்குகிறார். ஆர்சனிக்கம் ஆல்பம் நிகழ்த்திய அதிசயத்தை பார்த்து அசந்து போனேன்.
வெள்ளி, 21 மார்ச், 2014
திங்கள், 27 ஜனவரி, 2014
தலைவலியை தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்.
பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் வரை, வாழ்வின் அனைத்து மட்டங்களிலுள்ள சகலரையும் தலைவலி விட்டு வைப்பதில்லை.ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகளவில் அவதிக்குள்ளாகின்றனர்.. குறிப்பாக ஒருபக்க தலை வலியால் (migraine) மிகப்பெரியளவிற்கு சிரமப்படுகின்றனர். தலை தோன்றிய நாள் முதல் தலைவலியும் தோண்றியிருக்ககூடும் என்பதை அறிய முடிகிறது. ஆங்கில மருத்துவத்தின் தந்தை எனப்படும் மருத்துவர்,ஹிப்போகிரேட்டஸ் காலத்திலும், அதற்கு முன்பும் நோயை கடவுள் தனக்கு வழங்கிய தண்டனையாக மக்கள் நினைத்து வந்தனர்..அக்காலத்தில் தலைவலி தோன்றியதற்க்கான காரணத்தை அறிய முடியாவிட்டாலும் வாந்தியினால் தலைவலி குறைகிறது என்பதை அனுபவ பூர்வ மாக உணர்ந்தனர். அதனால் தலைவலியால் துடிப்போரை வாந்தி எடுக்க செய்தனர். சிலர்மயங்கி விழுந்தனர், சிலர் தப்பித்தனர். தலையிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதன் முலம் குணமடையலாம் என்று ஒரு ருபாய் நாணயம் அளவில் தலையில் துவாரமிட்டு இரத்தத்தை வெளியேற்றி சிகிச்சையளித்தனர். அட்டை பூச்சியை உடலில் விட்டு இரத்தத்தை உறிஞ்ச செய்தனர். இதனல் அட்டைகள் கொழுத்து வளர்ந்தன. தலைவலி தணிந்த பாடில்லை. . காரணம் சுற்றுப்புற சுழல் மாற்றங்களினாலும், இடமாற்றம்,உயர்ந்த மலைப்பகுதி, தானத உணவு, மினுங்கும்விளக்கு, வாசனைத்திரவியங்கள், சிகரெட் புகை,சத்தமான பெரிய ஒசைகள், கடுமையான வெயில் தாக்குதல் போண்றவற்றினாலும் செல் பேசியை அதிக நேரம் வைத்து பேசுவதால் கழுத்து பகுதியில் ஏற்படும் இறுக்கத்தாலும் கணிணி முன்பு அதிக நேரம் பணிபுரிவதால் உடலில் ஏற்படும் இறுக்கம், மன இறுக்கம் காரணமாக மற்றும் அனாசின்,ஆஸ்பிரின் மற்றும் உடல் வீக்கத்திற்க்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் வெண்னைய், சாக்லெட், ஜஸ்கிரீம், இவைகளில் உள்ள டைரமைன் (dieramaine) என்ற வேதிப்பொருள் தலைவலியை எற்ப்படுத்துகிறது.
பெண்களுக்குமுதல் மாதவிடாய் வெளிப்படும் காலம், மற்றும் மாதாஎதிரப்போக்கு வெளியேறும் சமயங்களிலும் விடாய் நிரந்தரமாக நிற்கும் சமயங்களிலும் (menophuse) ஈஸ்ட்ரோஜண் எனும் ஹார்மோன் சுரப்பு குறையும் போதும் (oestrogen) கருத்தடை மாத்திரை உட்கொள்வதாலும் குளிர்ச்சியான காய்கறி, மதுபானம் ,வெங்காயமும் சிலருக்கு தலைவலியை உருவாக்கும். தலை வலியின் போது காபி குடித்தால் கேஃபைன் (cacepine) என்ற வேதிப்பொருள் தலைவலியை குறைக்கும். அதிகமாக காபி குடித்தால் தலைவலி வரும். மன அழுத்தம்,மன உளைச்சல் உணர்ச்சிவசப்படுதல், களைப்புமிகுதியால், தூக்கமிண்மையாலும் தலைவலி தோன்றுகிறது. தாய்,தந்தை இருவருக்கும் தலைவலி இருந்தால் குழந்தைகளுக்கு 75 சத வீதம் தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.இருவரில் ஒருவருக்கு தலைவலி இருந்தால்40 சதவீதம் தலைவலி வரும் வாய்ப்பு உள்ளது. ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களிடம் ஒரு பக்க தலைவலி அதிகமாக காணப்படுகிறது.. ஒரு பக்க தலைவலி தோன்று வதற்கு முன்னறிகுறியாக பதினைந்து சதவீதமானவர்களுக்கு பார்வையில் பிரச்சனையை தோற்றுவிக்கிறது கண்களுக்கு முன்னால் பனிப்படலம் , கண்னை கூசச்செய்கிறஒளியும், வண்ண, வண்ணப்புள்ளிகளும் தோண்றும். இவ் வகைதலைவலியானது சுமார் ஒருமணி நேரம் இருக்கும்.. பார்வையில் பிரச்சனை இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் தலைவலி தோன்றுகிறவர்க்ளுக்கு நாலரை மணி நேரத்திலிருந்து இரண்டு நாள்வரை வலிநீடிக்கும். விண், விண் என்ற வலியுடன் நோயளியை வேறு வேலை எதுவும் செய்ய இயலாத நிலைக்கு இட்டுச் செல்லும்.
. படி எறுவது போன்ற சிறிய உடல் அசைவுகளாலும் கண் இமையைக் கூட அசைப்பதால் தலைவலி மேலும் அதிகமாகும். .குமட்டல், வாந்தி, மயக்கமும் ஏற்படும்.சுத்தியால், சம்மட்டியால் அடிப்பது அடிப்பது போலவும் தலையின் ஒர்பி்் ியால் சொருகுவது போலவும் வலி இருக்கும். வாரம் ஒருமுறை, அல்லது மாதம் ஒரு முறை என முறை வைத்து தலைவலி தோன்றும். பல்ளி மாணவர்கள், மாணவிகள், பாடங்களை கூர்ந்து கவணித்து பாடங்களை படிப்பதாலும் ஆசிரியர் கரும் பலகையில் எழுதும் எழுத்துகளை கூர்ந்துகவனிப்பதாலும் தலைவலி தோன்றும். சிகிச்சை, ஆக்கில மருத்துவ முறையில் தலைவலின் நிவாரணியாக ஆண்டுக்கு 16000 டன் ஆபிரின் விற்பணையாகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையில் தலைவலிக்கு சிகிச்சை பெற வருகிற அனைவருக்கும் ஒரே மாதிரியான வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவதிலை. தலைவலி தோணறியதற்க்கான காரணம், வலியின் தன்மை, நோயளியின் உடலமைப்பு, வலியின் போது உருவாகும் மனநிலை,மன உணர்ச்சியில் எற்ப்படும் மாறுபாடுகள்,என முழு மனிதனையும் ஆய்வு செய்து மாத்திரைகள் வழங்குவதால் பல ஆண்டுகள் தலைவலியால் தவிப்போரும் துடிப்போரும் உடனடு நிவாரணமும் விரைவில் முழு நலமும் பெறலாம். தலைவலியை குணமாக்கும் ஹோமியோபதி மருந்துகள். பிரையோனியா: தலையில் இரத்த தேக்கத்துடன் தலைவலி. மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் தலைவலி. அடுப்பின் அருகே இருப்பதால் நெருப்பின் அருகே இருப்பதால் தலைவலி. குனிந்தால் ,இருமினால், தும்மினால் வலி அதிகமாகும்..கண் இமையை திற்ந்தாலேவலி அதிகரிக்கும். முச்சு விட்டால் கூட வலி அதிகரிக்கும். ஒய்வினாலும் அசைவின்றி படுத்திருந்தால் வலி தணியும். நேட்ரம் மூர்:முன் நெற்றி புருவங்களில் வலி அதிகமிருக்கும்.மானவ , மாணவியரின் தலைவலி, கண் களை அதிகம் பயண் படுத்தியதால் ஏற்படும் தலைவலி. விடாய் முடிந்ததும் வரும் தலைவலி. சுத்தி, சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. தலைவலின் போது கண்ணிலிருந்து நீர் வடிதல். இக்னேஹியா:மனவருத்தத்தால் ஏற்படும்தலைவலி அன்புக்குரியவர்களை இழந்ததால் உண்டாண வலி. தலையில் ஊசியால் அல்லது ஆணியை செலுத்துவது போன்ற தலைவலி. தரையில் படுத்திருந்தால் வலி குறையும். சாங்கினேரியா: ஏழு நாட்களுக்கு ஒரு முறை வரும் தலைவலி. பின் தலையில் துவங்கி வலது நெர்றி பொட்டில் வந்து வலி தங்கும். பித்த வாந்தியுடன் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. மிக கடுமையான வலி. காலையில் துவங்கிய வலி வெயில் ஏற, ஏற வலி அதிகரித்து சூரியன் மறையும் போது வலி தணியும்.. பெல்லடோனா; நெற்றி பொட்டில் துடிக்கும் வலி. வெடிக்கும் வலி. முகம் சிவந்து சூடாக இருக்கும். வலி திடீரென தோன்றி திடீரென மறையும். அதிக வெளிச்சத்தால், சத்தத்தினால், வலி அதிகமாகும். ஒய்வின் போதும் இருட்டில் இருக்கும் போதும் வலிதணியும். க்குளாய்ன்; கடுமையான் வெயிலில் அலைந்ததால் சூரிய ஒளி தலையில் நேராக படுவதால் கேஷ் லைட் வெளிச்சத்தில் பனிபுரிவதால், மாதவிடாய் வெளியாகதிதினால்வ்ரும் தலைவலி. நன்றாக தூங்கி எழுவதால் தலைவலி குறையும். குட்டி தூக்கத்தினால் வலி குறையாது அய்ரிஸ் வெர்சி கலர்; முறை வைத்து வரும் பித்ததலைவலி, வலி வருவதற்கு முன்பாக பார்வை மூடு பனியில் பார்ப்பதுபோலிருக்கும். கசப்பான வாந்தி எடுத்தபின்பு வலி குறையும். ஸ்பைஜிலியா; கடுமையான நரம்புத்தலைவலி பின் தலையில் துவங்கி இடது புருவத்தில் வந்து தங்கும். நடந்தால் வலி அதிகமாகும். தலையை உயரமாக வைத்து படுத்தால் வலி குறையும், பல்சடில்லா; கொழுப்பு நிறைந்த உணவுகள், ஐஸ் கிரிம் சாப்பிட்டதால் உணடான தலைவலி. ஆண்டிக்குரு; கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்ததால் தலைவலி தலைவழியே குளித்ததால் வரும் தலைவலி. சிபிலினம்; இரவு முழுவதும் தலைவலி. பொழுது விடிந்ததும் தலைவலி குறையும், லாச்சசீஸ்; தூக்கத்தில் தலை வலி தோன்றும் அல்லது தூங்கி எழுந்ததும் தலைவலி அதிகமாகும்.மாதவிடாய் தோன்றாமையால் அல்லது வெளியாகமையால் தோன்றும் தலைவலி. ஆரம் மெட்; இரவில் தூங்கும் போது தலைவலி வந்துவிட்டால் எழுந்து நடமாடுவார். டியுபர்குலினம்; தலைவலி தாங்க முடியாமல் சுவற்றில், மரத்தில் மோதுவார்.. அசட்டிக் அசிட்; புகையிலை, அபினி, காபி, சாராயம், அளவு மீறி உபயோகித்தால் வரும் தலைவலி. அகேரிகஸ்; மது அருந்தியதால் தலைவலி. நணபர்களே வித, விதமான தலைவலிகளுக்கும் வித்தியாசமான தலைவலிகளூக்கும் ஹோமியோபதில் நிச்சயம் தீர்வு உண்டு,,உங்களுக்கு அருகில் ஹோமியோபதி மருத்துவ நிபுனரை சந்திக்கவும்.
திங்கள், 13 ஜனவரி, 2014
வாழ்க்கை மாற்ற நோய்கள்---ஹோமியோ,மாற்று மருத்துவ தீர்வுகள்...
இயந்திரத்தனமான பரபரப்பான வாழ்வில் நாள் தோறும் மக்கள் எப்படியெல்லாம் நோய்களை விலை கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள் (கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப்போல, சரியான பாதை என நினைத்து மீண்டு வர முடியாத அதல பாதாளத்தில் வீழ்ந்து மடிவதைப்போல.) இக்கால சமுகம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது .ஒடி, ஒடி உழைத்து சேர்த்த பணத்தை மருத்துவதிற்கே செலவு செய்ய வேண்டிய நிலை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு, என்பதை இப்புத்தகம் அழகாக விள்க்குகிறது.மக்கள் ஆரோக்கியமாக வாழ அக்கறையுடன் சிந்தித்து உருவாக்கப்பட்ட புத்தகம் என்பதை வாசிக்கும் போது உணர முடிகிறது. 61. கட்டுரை, 176,பக்கங்கள்... மூன்று பகுதிகளாக பிரித்து அழகு தாளில் உறுதிமிக்க பைண்டிங்கில் உள்ள இப்புத்தகம் வாழ் நாள் முழுவதும் படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம் இது. வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக அன்றாட வாழ்வில் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச்செல்லும்வரை நாம் எவ்வளவு நச்சு நி றைந்த உணவு,காற்று, நீர் போன்ற வற்றால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து தப்பிக்க என்ன வழி என்ப்தை மருத்துவ ரீதியாக இப்புத்தகம் அலசுகிறது பாஸ்ட் புட் அது வேஸ்ட் ..... நொறுக்கு தீனியால் ஏற்படும் ஏற்படும் ஆபத்து ஐஸ் வாட்டர் ஆபத்து... மரபனு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உருவாகும் ஆபத்து... பற் பசைகள் குறித்த எச்சரிக்கை... இருதய நோய்கள், சிறு நீரகசெயலிழப்பு போன்ற பெரு நோய்ளுக்கு மாற்று மருத்துவ தீரிவுகள் முன் வைக்கப்பட்டுள்ளன, இக் கால கட்டத்தில் குழந்தைகள் சந்திக்கும் சவால் களுக்கு அழகான தீர்வுகள் ஹோமியோபதி பிரிட்டன் மலர் மருத்துவத்தில் உள்ளன. என்பதை தெளிவாக அறிவியல் பூர்வமாக மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது, ஒவ்வொரு கட்டுரை வாசித்து முடிக்கும் போது நம்மையே அறியாமல் வாழ்வில் எவ்வளவு தவறுகள் செய்கிறோம் என்கிற உணர்வு அதை திருத்திக்கொள்ள உள்ளத்தில் உந்து சக்தி உருவாவதை உணர முடிகிறது.. மாற்று முறை மருத்துவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். திருமண நாள்,, பிறந்தநாள்,கொண்டாடுவோருக்கும் மனதுக்கு பிடித்தமான நண்பர்களுக்கும் பரிசளிக்க மிக பொருத்த மான புத்தகம். பள்ளிகள் கல்லூரிகள், நூலகங்களில் வாங்கி பயன் படுத்த வேண்டிய நூல்..
நூல் ஆசிரியர்கள்: டாக்டர். எஸ்.வெங்கடாசலம் டாக்டர். வெ.ஆவுடேஸ்வரி
வெளியீடு:; தீபா பதிப்பகம் 29/ 9.A பழைய டிரங்க் ரோடு. சாத்தூர்--626203 செல்;9443145700 போன்;04562 263168 விலை. ரூபாய்; 100 மட்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
.jpg)
