பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பல்கலைக்கழகத்துணைவேந்தர் வரை, வாழ்வின் அனைத்து மட்டங்களிலுள்ள சகலரையும் தலைவலி விட்டு வைப்பதில்லை.ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகளவில் அவதிக்குள்ளாகின்றனர்.. குறிப்பாக ஒருபக்க தலை வலியால் (migraine) மிகப்பெரியளவிற்கு சிரமப்படுகின்றனர். தலை தோன்றிய நாள் முதல் தலைவலியும் தோண்றியிருக்ககூடும் என்பதை அறிய முடிகிறது. ஆங்கில மருத்துவத்தின் தந்தை எனப்படும் மருத்துவர்,ஹிப்போகிரேட்டஸ் காலத்திலும், அதற்கு முன்பும் நோயை கடவுள் தனக்கு வழங்கிய தண்டனையாக மக்கள் நினைத்து வந்தனர்..அக்காலத்தில் தலைவலி தோன்றியதற்க்கான காரணத்தை அறிய முடியாவிட்டாலும் வாந்தியினால் தலைவலி குறைகிறது என்பதை அனுபவ பூர்வ மாக உணர்ந்தனர். அதனால் தலைவலியால் துடிப்போரை வாந்தி எடுக்க செய்தனர். சிலர்மயங்கி விழுந்தனர், சிலர் தப்பித்தனர். தலையிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதன் முலம் குணமடையலாம் என்று ஒரு ருபாய் நாணயம் அளவில் தலையில் துவாரமிட்டு இரத்தத்தை வெளியேற்றி சிகிச்சையளித்தனர். அட்டை பூச்சியை உடலில் விட்டு இரத்தத்தை உறிஞ்ச செய்தனர். இதனல் அட்டைகள் கொழுத்து வளர்ந்தன. தலைவலி தணிந்த பாடில்லை. . காரணம் சுற்றுப்புற சுழல் மாற்றங்களினாலும், இடமாற்றம்,உயர்ந்த மலைப்பகுதி, தானத உணவு, மினுங்கும்விளக்கு, வாசனைத்திரவியங்கள், சிகரெட் புகை,சத்தமான பெரிய ஒசைகள், கடுமையான வெயில் தாக்குதல் போண்றவற்றினாலும் செல் பேசியை அதிக நேரம் வைத்து பேசுவதால் கழுத்து பகுதியில் ஏற்படும் இறுக்கத்தாலும் கணிணி முன்பு அதிக நேரம் பணிபுரிவதால் உடலில் ஏற்படும் இறுக்கம், மன இறுக்கம் காரணமாக மற்றும் அனாசின்,ஆஸ்பிரின் மற்றும் உடல் வீக்கத்திற்க்காக சாப்பிடும் மாத்திரைகளாலும் வெண்னைய், சாக்லெட், ஜஸ்கிரீம், இவைகளில் உள்ள டைரமைன் (dieramaine) என்ற வேதிப்பொருள் தலைவலியை எற்ப்படுத்துகிறது.
பெண்களுக்குமுதல் மாதவிடாய் வெளிப்படும் காலம், மற்றும் மாதாஎதிரப்போக்கு வெளியேறும் சமயங்களிலும் விடாய் நிரந்தரமாக நிற்கும் சமயங்களிலும் (menophuse) ஈஸ்ட்ரோஜண் எனும் ஹார்மோன் சுரப்பு குறையும் போதும் (oestrogen) கருத்தடை மாத்திரை உட்கொள்வதாலும் குளிர்ச்சியான காய்கறி, மதுபானம் ,வெங்காயமும் சிலருக்கு தலைவலியை உருவாக்கும். தலை வலியின் போது காபி குடித்தால் கேஃபைன் (cacepine) என்ற வேதிப்பொருள் தலைவலியை குறைக்கும். அதிகமாக காபி குடித்தால் தலைவலி வரும். மன அழுத்தம்,மன உளைச்சல் உணர்ச்சிவசப்படுதல், களைப்புமிகுதியால், தூக்கமிண்மையாலும் தலைவலி தோன்றுகிறது. தாய்,தந்தை இருவருக்கும் தலைவலி இருந்தால் குழந்தைகளுக்கு 75 சத வீதம் தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.இருவரில் ஒருவருக்கு தலைவலி இருந்தால்40 சதவீதம் தலைவலி வரும் வாய்ப்பு உள்ளது. ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குட்பட்டவர்களிடம் ஒரு பக்க தலைவலி அதிகமாக காணப்படுகிறது.. ஒரு பக்க தலைவலி தோன்று வதற்கு முன்னறிகுறியாக பதினைந்து சதவீதமானவர்களுக்கு பார்வையில் பிரச்சனையை தோற்றுவிக்கிறது கண்களுக்கு முன்னால் பனிப்படலம் , கண்னை கூசச்செய்கிறஒளியும், வண்ண, வண்ணப்புள்ளிகளும் தோண்றும். இவ் வகைதலைவலியானது சுமார் ஒருமணி நேரம் இருக்கும்.. பார்வையில் பிரச்சனை இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் தலைவலி தோன்றுகிறவர்க்ளுக்கு நாலரை மணி நேரத்திலிருந்து இரண்டு நாள்வரை வலிநீடிக்கும். விண், விண் என்ற வலியுடன் நோயளியை வேறு வேலை எதுவும் செய்ய இயலாத நிலைக்கு இட்டுச் செல்லும்.
. படி எறுவது போன்ற சிறிய உடல் அசைவுகளாலும் கண் இமையைக் கூட அசைப்பதால் தலைவலி மேலும் அதிகமாகும். .குமட்டல், வாந்தி, மயக்கமும் ஏற்படும்.சுத்தியால், சம்மட்டியால் அடிப்பது அடிப்பது போலவும் தலையின் ஒர்பி்் ியால் சொருகுவது போலவும் வலி இருக்கும். வாரம் ஒருமுறை, அல்லது மாதம் ஒரு முறை என முறை வைத்து தலைவலி தோன்றும். பல்ளி மாணவர்கள், மாணவிகள், பாடங்களை கூர்ந்து கவணித்து பாடங்களை படிப்பதாலும் ஆசிரியர் கரும் பலகையில் எழுதும் எழுத்துகளை கூர்ந்துகவனிப்பதாலும் தலைவலி தோன்றும். சிகிச்சை, ஆக்கில மருத்துவ முறையில் தலைவலின் நிவாரணியாக ஆண்டுக்கு 16000 டன் ஆபிரின் விற்பணையாகிறது. ஹோமியோபதி மருத்துவ முறையில் தலைவலிக்கு சிகிச்சை பெற வருகிற அனைவருக்கும் ஒரே மாதிரியான வலி நிவாரண மாத்திரைகள் வழங்குவதிலை. தலைவலி தோணறியதற்க்கான காரணம், வலியின் தன்மை, நோயளியின் உடலமைப்பு, வலியின் போது உருவாகும் மனநிலை,மன உணர்ச்சியில் எற்ப்படும் மாறுபாடுகள்,என முழு மனிதனையும் ஆய்வு செய்து மாத்திரைகள் வழங்குவதால் பல ஆண்டுகள் தலைவலியால் தவிப்போரும் துடிப்போரும் உடனடு நிவாரணமும் விரைவில் முழு நலமும் பெறலாம். தலைவலியை குணமாக்கும் ஹோமியோபதி மருந்துகள். பிரையோனியா: தலையில் இரத்த தேக்கத்துடன் தலைவலி. மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் தலைவலி. அடுப்பின் அருகே இருப்பதால் நெருப்பின் அருகே இருப்பதால் தலைவலி. குனிந்தால் ,இருமினால், தும்மினால் வலி அதிகமாகும்..கண் இமையை திற்ந்தாலேவலி அதிகரிக்கும். முச்சு விட்டால் கூட வலி அதிகரிக்கும். ஒய்வினாலும் அசைவின்றி படுத்திருந்தால் வலி தணியும். நேட்ரம் மூர்:முன் நெற்றி புருவங்களில் வலி அதிகமிருக்கும்.மானவ , மாணவியரின் தலைவலி, கண் களை அதிகம் பயண் படுத்தியதால் ஏற்படும் தலைவலி. விடாய் முடிந்ததும் வரும் தலைவலி. சுத்தி, சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. தலைவலின் போது கண்ணிலிருந்து நீர் வடிதல். இக்னேஹியா:மனவருத்தத்தால் ஏற்படும்தலைவலி அன்புக்குரியவர்களை இழந்ததால் உண்டாண வலி. தலையில் ஊசியால் அல்லது ஆணியை செலுத்துவது போன்ற தலைவலி. தரையில் படுத்திருந்தால் வலி குறையும். சாங்கினேரியா: ஏழு நாட்களுக்கு ஒரு முறை வரும் தலைவலி. பின் தலையில் துவங்கி வலது நெர்றி பொட்டில் வந்து வலி தங்கும். பித்த வாந்தியுடன் சம்மட்டியால் அடிப்பது போன்ற வலி. மிக கடுமையான வலி. காலையில் துவங்கிய வலி வெயில் ஏற, ஏற வலி அதிகரித்து சூரியன் மறையும் போது வலி தணியும்.. பெல்லடோனா; நெற்றி பொட்டில் துடிக்கும் வலி. வெடிக்கும் வலி. முகம் சிவந்து சூடாக இருக்கும். வலி திடீரென தோன்றி திடீரென மறையும். அதிக வெளிச்சத்தால், சத்தத்தினால், வலி அதிகமாகும். ஒய்வின் போதும் இருட்டில் இருக்கும் போதும் வலிதணியும். க்குளாய்ன்; கடுமையான் வெயிலில் அலைந்ததால் சூரிய ஒளி தலையில் நேராக படுவதால் கேஷ் லைட் வெளிச்சத்தில் பனிபுரிவதால், மாதவிடாய் வெளியாகதிதினால்வ்ரும் தலைவலி. நன்றாக தூங்கி எழுவதால் தலைவலி குறையும். குட்டி தூக்கத்தினால் வலி குறையாது அய்ரிஸ் வெர்சி கலர்; முறை வைத்து வரும் பித்ததலைவலி, வலி வருவதற்கு முன்பாக பார்வை மூடு பனியில் பார்ப்பதுபோலிருக்கும். கசப்பான வாந்தி எடுத்தபின்பு வலி குறையும். ஸ்பைஜிலியா; கடுமையான நரம்புத்தலைவலி பின் தலையில் துவங்கி இடது புருவத்தில் வந்து தங்கும். நடந்தால் வலி அதிகமாகும். தலையை உயரமாக வைத்து படுத்தால் வலி குறையும், பல்சடில்லா; கொழுப்பு நிறைந்த உணவுகள், ஐஸ் கிரிம் சாப்பிட்டதால் உணடான தலைவலி. ஆண்டிக்குரு; கோடை காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்ததால் தலைவலி தலைவழியே குளித்ததால் வரும் தலைவலி. சிபிலினம்; இரவு முழுவதும் தலைவலி. பொழுது விடிந்ததும் தலைவலி குறையும், லாச்சசீஸ்; தூக்கத்தில் தலை வலி தோன்றும் அல்லது தூங்கி எழுந்ததும் தலைவலி அதிகமாகும்.மாதவிடாய் தோன்றாமையால் அல்லது வெளியாகமையால் தோன்றும் தலைவலி. ஆரம் மெட்; இரவில் தூங்கும் போது தலைவலி வந்துவிட்டால் எழுந்து நடமாடுவார். டியுபர்குலினம்; தலைவலி தாங்க முடியாமல் சுவற்றில், மரத்தில் மோதுவார்.. அசட்டிக் அசிட்; புகையிலை, அபினி, காபி, சாராயம், அளவு மீறி உபயோகித்தால் வரும் தலைவலி. அகேரிகஸ்; மது அருந்தியதால் தலைவலி. நணபர்களே வித, விதமான தலைவலிகளுக்கும் வித்தியாசமான தலைவலிகளூக்கும் ஹோமியோபதில் நிச்சயம் தீர்வு உண்டு,,உங்களுக்கு அருகில் ஹோமியோபதி மருத்துவ நிபுனரை சந்திக்கவும்.
.jpg)
